RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Saturday, August 29, 2009

மியாவ் மியாவ் பூனை

படம் : கந்தசாமி
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள் : விக்ரம், பிரியா ஹமேஷ்
விரும்பி கேட்டவர் : இசக்கி முத்து

மியாவ் மியாவ் பூனை
அட…
மீசை இல்லா பூனை
திருடித் திங்கப் பார்க்கறியே
திம்சுக்கட்ட மீனை?

மில்க்கை தேடும் பூனை
சீ…போ‘ன்னு விரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை!

நம் இதயம் ஒண்ணு
நம் உடல்தான் ரெண்டு
நாம் ஒண்ணா சேர்ந்தா ஆவோம் மூணு

உன் பார்வை ஒண்ணு
அதில் அர்த்தம் இரண்டு
அது சொல்லத் தூண்டும் வார்த்தை மூணு

மியாவ் மியாவ் பூனை...

வேகத்துக்கு நான் பழசு
வெட்கத்துக்கு நான் புதுசு

மோதலுக்கு நான் பழசு
காதலுக்கு நான் புதுசு

நம் மெத்தை ஒண்ணு
அதில் தூக்கம் ரெண்டு
அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு

உன் இடுப்பு ஒண்ணு
அதில் உடுப்பு ரெண்டு
அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூனு

மியாவ் மியாவ் பூனை...

கூச்சத்துக்கு லீவு கொடு
தேகத்துக்கு நோவு கொடு

ஆடைகளை தூர விடு
ஆசைகளை சேர விடு

நம் முத்தம் ஒண்ணு
அதில் எச்சில் ரெண்டு
அந்த போதையில் மறக்கும் காலம் மூன்று

உன் மேனி ஒண்ணு
அதில் தேனீ ரெண்டு
கொட்டும் நானே ஹனி மூணு

மியாவ் மியாவ் பூனை...

Thursday, August 27, 2009

மருவத்தூர் ஓம் சக்தி

படம்: ராஜ ராஜேஸ்வரி
இசை : தேவ
விரும்பி கேட்டவர் : ஜெயசித்ரா ராமச்சந்திரன்

மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி
உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி
கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி
மாயவரம் அபயாம்பிகா.

மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி
காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா
திருவாரூர் கமலாம்பிகா

நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா
பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா
சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி
ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி
அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி
பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி
ஆரல்வாய் இசக்கி அம்மா,
வாடீ! ஆரணி படவேட்டம்மா!

திருவாங்கூர் மேகவல்லி, தாயி!
திருக்கூடல் மதுரவல்லி!
புதுக்கோட்டை புவனேஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி
மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி
நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா.

மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே
செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா !
கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி
மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி
வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா
மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள்
காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா !

விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி
காரைக்குடியம்மா பொற்கூடையம்மா !
ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி
திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி!

ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி !"

எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி
அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா
சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா
கோயமுத்தூரின் கொணியம்மாவே
சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா

கொல்லிம்லை வாழும் எட்டுகைய‌ம்மா
வாகேஸ்வ‌ரி, பாகேஸ்வ‌ரி வைதிஸ்வ‌ரி யோகேஸ்வ‌ரி
ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே
அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி
ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே

ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி
மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி
திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி
திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா

ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!

தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம்
மலையம்மாவே நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே
அத்தா கருப்புரு பெட்டிகாளி, பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே
பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா, மேல்மலையனூர் அங்களாம்மா

அடி கங்கையம்மா, தாயே தூள்சியம்மா, வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா
உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட‌
மாயம்மா வா வா

ஓம் சக்தி, ஓம் சக்தி
மருவத்தூர் ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
உலகாளும் ஓம் சக்தி
வா சக்தி வா சக்தி
வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி!

குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம்
நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா

திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி
சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே
சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா
பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு
சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி

கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர
அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே
வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி
மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே
வரவேண்டும்
வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே

தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி
மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா

ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள்
ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி
திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கொட்டை மாரி

திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி
இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா

இப்பாடலின் வீடியோ இங்கே..

Wednesday, August 26, 2009

படம் : ஜோடி
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், மகாலக்ஷ்மி ஐயர்
வரிகள் : வைரமுத்து
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்
வெள்ளி மலரே வெளி மலரே...
வெள்ளி மலரே வெள்ளி மலரே

நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏந்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

ஓ...
வெள்ளி மலரே வெள்ளி மலரே

ஏ...
மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்
ஏ வெக்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்
வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே

வெள்ளி மலரே...
இளந்தளிரே...

ஏ...
வனங்களில் பூந்தளிர் தேடும்போதும் நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம் அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
மழையிலும் கூவும் மரகதக் குயில் நான் இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்

வெள்ளி மலரே வெளி மலரே

நேற்றுவரை..
இளந்தளிரே..

வெள்ளி மலரே வெளி மலரே...
இப்பாடலின் வீடியோ இங்கே..

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்

படம் : பொல்லாதவன்
இசை :
G.V ப்ரகாஷ்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், யோகி B & சுனிதா சாரதி
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடி

முதன்முறை என் விரல் பூக்கள்
பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ்
பறித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய்
மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும்
கிடைத்தது வீட்டுக்குள்ளே

காதலே ஒருவகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித்
தலைகீழாகத் தொங்கிடுமே
ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

என் பேர் கேட்டால் உன் பேர்
சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம்
போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப்
படித்தேன் கிறக்கத்திலே
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம்
கொடுத்தேன் மயக்கத்திலே

ஊ ஆ ...ஆ ஊ ஆ.... ஊ ஆ ரா....... ரா ரே

ஓ... காதலும் ஒருவகை போதைதானே
உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல
ஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால்
புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல

உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடா

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே
அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடா

ஆ... ஆ....ஆ ஆ .. ஆ ஆ ...ஆ ஆ.....
இப்பாடலின் வீடியோ இங்கே..

நறுமுகையே நறுமுகையே

படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
விரும்பி கேட்டவர்: சௌமியா
நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள்
என் மார்த்துளைத்ததென்ன
பாண்டிநாதனைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை

நறுமுகையே..


யாயும் யாயும் யாராகியறோனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அரிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா (2)
இப்பாடலின் வீடியோ இங்கே..

Tuesday, August 25, 2009

தென்மேற்குப் பருவக்காற்று

படம் : கருத்தம்மா
இசை : ஏ.ஆர். ரகுமான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன் & சித்ரா
விரும்பி கேட்டவர்: சௌமியா

ஆ: தென்மேற்குப் பருவக்காற்று,
தேனிப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்!
தெம்மாங்கு பாடிக்கொன்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்!
பெ: வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டு விட,
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க....

தென்மேற்கு..

ஆ: வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்,
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்!

பெ: தாலாட்டில் இல்லாத சங்கீத சாரங்கள்,
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்!

ஆ: மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ?
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே!

பெ: மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ?
நினைக்கையில் உள்ளூர கள்ளூறுதே....!

தென்மேற்கு..


பெ:
நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி,
நாமென்ற ஒரு வார்த்தை உண்டானதே!

ஆ: ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி,
ஆளென்ற ஒரு வார்த்தை உண்டானதே!

பெ: காதலென்ற மந்திரத்தின் மாயம் என்ன?
கள்ளும் முள்ளும் இப்போது பூவானதே!

ஆ: வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து,
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே....!

தென்மேற்கு..
இப்பாடலின் வீடியோ இங்கே..

Monday, August 24, 2009

பாட்டு சொல்லி பாட சொல்லி

படம் :அழகி
பாடியவர் :சாதனா சர்கம்
இசை : இளையராஜா
பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டோன்று தந்ததடி

பாட்டு..

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யார் அறிவார்
வாழ்கை செல்லும் பாதைதனை யார் உரைப்பார்
இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒலி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை

பாட்டு..

புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம் பருவம் அதை என்ன என்ன மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை

இப்பாடலின் வீடியோ இங்கே..

Sunday, August 23, 2009

ஏதோ நினைவுகள்

படம் : அகல் விளக்கு
பாடியவர்கள் : S.P.ஷைலஜா & கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் : கங்கைஅமரன்
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ....

ஏதோ நினைவுகள்...

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம்

ஏதோ நினைவுகள்..

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்..ம..ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்..ம..ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம்

ஏதோ நினைவுகள்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

அகரம் இப்போ சிகரமாச்சு

படம் : சிகரம்
இசை : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

அகரம் இப்போ சிகரமாச்சு
தகரம் இப்போ தங்கமாச்சு
காட்டு மூங்கில பாட்டு பாடும் புல்லாங்குழலாச்சு

சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி

அகரம்...

கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்ன
மழை வெள்ளம் போகும்.. கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை
இன்றென்பது உண்மையே..
நம்பிக்கை உங்கள் கையிலே..

அகரம்...

தண்ணீரில மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியார பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை
தலைகோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது..
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது...

அகரம்...
இப்பாடலின் வீடியோ இங்கே..

நான் தேடும் செவ்வந்தி பூவிது

படம் : தர்மபத்தினி
இசை : இளையராஜா
பாடியவர்
கள் : இளையராஜா, ஜானகி
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும்..

பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன் மானே என் யோகம் தான்
பெண் தானோ சந்தேகம் தான்
என் தேவி
ஆ...ஆ...
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமென தவம் கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராசாவே நாளாச்சு

நான் தேடும்..

மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கு அந்த சுகம் வருமோ
தள்ளாடும் என் தேகம் தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா
ஆ....
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

மேகம் கருக்குது

படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி
மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து
காத்து மழை காத்து

மேகம் கருக்குது...

ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்

மேகம் கருக்குது...


தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன

தொட்டு தொட்டு...

தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு

மேகம் கருக்குது...


பூவுக்குள்ள வாசம் வச்சான்
பாலுக்குள்ள நெய்யை வச்சான்

பூவுக்குள்ள..

கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் பனசு

கண்ணுக்குள்ள..

பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..
நீ வாடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு

மேகம் கருக்குது...
இப்பாடலின் வீடியோ இங்கே..

கத்தாழங் காட்டு வழி

படம்: கிழக்குச் சீமையிலே
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
கத்தாழங் காட்டு வழி
கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே
வாக்கப்பட்டு போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதும்மா
தங்கம் போல நான் வளர்த்த தங்கச்சி பிரியக் கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிப்புட்டா பாதி உயிர் போச்சு

வண்டி மாடு எட்டு வச்சு..

அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வர்வா மாமரமே போய் வரவா
அணில் வால் மீச கொண்ட அண்ணே உன்னைவிட்டு
புலிவால் மீசை கொண்ட புருசனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம்தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம்தானே

வண்டி மாடு எட்டு வச்சு..
இப்பாடலின் வீடியோ இங்கே..

காத்திருந்து காத்திருந்து

படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணைச்சா நிம்மதியாகுமடி

காத்திருந்து..

முக்குளிச்சு நானெடுத்த முத்து சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வச்ச இடம் காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே
தேன் வடிக்கும் பாத்திரமே தென் மதுரப் பூச்சரமே
கண்டது என்னாச்சு கண்ணீரில் நின்னாச்சு

காத்திருந்து..

நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பிப் பார்த்தாலும்
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனசை
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் உம்மனசை
நெஞ்சமும் புண்ணாச்சு காரணம் கண்ணாச்சு

காத்திருந்து..
இப்பாடலின் வீடியோ இங்கே..

Thursday, August 20, 2009

ஒட்டகத்த கட்டிக்கோ

படம்: ஜென்டில் மேன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள்: வாலி

விரும்பி கேட்டவர்: சௌமியா

ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை

ஒட்டகத்த..

கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது
உள்ளங்கைத் தேனே கள்வன் நான்தானே
கல்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானே
பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை

ஒட்டகத்த..

உடைவாளில் நீயெந்தன் உடைதொட்ட அந்நேரம்
உன் பார்வை எந்தன் உயிர்தொட்ட தருவாயோ
கோழைக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்க்கை என்னாகும்
உன் வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே பொன்னாகும்
நீயென்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்
முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்

ஒட்டகத்த..
இப்பாடலின் வீடியோ இங்கே..

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

படம்: உழவன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்: சௌமியா

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ

பெண்ணல்ல பெண்ணல்ல..

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் சென்பகப்பூ....

பெண்ணல்ல பெண்ணல்ல..


தென்றலைப் போல நடப்பவள்
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு..
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

பெண்ணல்ல பெண்ணல்ல..


சித்திரை மாத நிலவொளி..
அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தைப் போல இருப்பவள்
வெல்லப் பாகைப் போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனைப் பூமுடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்...

பெண்ணல்ல பெண்ணல்ல..
இப்பாடலின் வீடியோ இங்கே..

கிழக்கே பார்த்தேன்

படம்: ஆட்டோகிராஃப்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், போனி சக்கரவர்த்தி
விரும்பி கேட்டவர்: சௌமியா

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி

என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி
தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழி
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழி
தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி

Well My Friend
I have something to say
I want you to listen
Listen to me
This is what I have to say
Here It Goes..

தாகம் என்று சொல்கிறேன்
மரக் கன்று ஒன்றை தருகிறாய்
பசிக்குது என்று சொல்கிறேன்
நெல்மனி ஒன்றை தருகிறாய்
உந்தன் கை விரல் பிடிக்கையில்
புதிதாய் நம்பிக்கை பிறக்குது
உந்தன் கூட நடக்கையில்
ஒன்பதாம் திசையும் திறக்குது
என் பயணத்தில் எல்லாம் நீ
கைக்காட்டி மரமாய் முளைத்தாய்
என் மனதை உழுது
நீ நல்ல விதைகளை விதைத்தாய்
என்னை நானே செதுக்க
நீ உன்னையே உலியாய் தந்தாய்
என் பலம் என்னவென்று எனக்கு
நீ இன்றுதான் உணர வைத்தாய்

கிழக்கே..


மழையோ உந்தன் புன்னகை
மனசெல்லாம் மெல்ல நனையுதே
வேருக்குள் விழுந்த நீர் துளி
பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே
உனக்குள் ஏற்ப்படும் உத்சவம்
என்னையும் குதூகலப் படுத்துதே
தோழி ஒருத்தி கிடைத்தால்
இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
இதுவரை இந்த உண்மை
ஏன் தெரியவில்லை எவர்க்கும்
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி
படைத்தவன் கேட்டால் கூட
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி

கிழக்கே..

நேற்று இல்லாத மாற்றம் என்னது

படம்: புதிய முகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா
வரிகள்: வைரமுத்து
விரும்பி கேட்டவர்: சௌமியா
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..

நேற்று..


கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை

நேற்று..


வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்
வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?

நேற்று..
இப்பாடலின் வீடியோ இங்கே..

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர்: சௌமியா
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம்..


போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா .. (2)
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே

சங்கீத மேகம்..


உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பாவனைகள் போகின்றதே .. (2)
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே

சங்கீத மேகம்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

இளமையெனும் பூங்காற்று

படம்: பகலில் ஒரு இரவு
இசை: இளையராஜா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: சௌமியா

இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் .. (2)

இளமையெனும்..

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

இளமையெனும்..

அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

இளமையெனும்..

மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

இளமையெனும்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

சங்கீத வானில்

படம்: சின்ன பூவே மெல்ல பேசு
இசை & வரிகள்: S.A.ராஜ்குமார்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

தோள் மீது வா...உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே..

சங்கீத வானில்...

ஆனந்த ராகங்களில்...நான் ஆலாபனை செய்கிரேன்..
நான் உந்தன் கீதம் தன்னை...ஆராதனை செய்கிரேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே...
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே...
கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே...
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

பொன்மாலை வேளைகளில்...உண் வாசல் நான் தேடினேன்
கண்ணென்னும் ஓடங்களில்...கரை தேடி நான் ஓடினேன்
கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே..
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே..
உன்னில் தினம் உடல் கரைகின்றதே..
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே...
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே...
தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உண் மஞ்சம் தானே...

சங்கீத வானில்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா

படம்: செந்தூர பூவே
இசை: மனோஜ் ஜியன்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை நீரிலே தன் நிலை மீறியே
ஒரு கதி போல என் நெஞ்சம் அலை மோதுதே ...

ஓஓஓஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெல்லைக்கிங்கே களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெல்லைக்கிங்கே களங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டே ன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இப்பாடலின் வீடியோ இங்கே..

இளங்காத்து வீசுதே

படம்: பிதாமகன்
இசை: இளையராஜா
வரிகள்: பழனிபாரதி
பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஸ்ரேயா கோஷால்
விரும்பி கேட்டவர்: சௌமியா
இளங்காத்து வீசுதே!
இசை போல பேசுதே!

வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே!

மேகம் முழிச்சு கேக்குதே!

கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே!

மழைச்சாரல் தெறிக்குதே!
புல்வெளி பாதை விரிக்குதே!

வானவில் குடையும் பிடிக்குதே!
புல்வெளி பாதை விரிக்குதே!

வானவில் குடையும் பிடிக்குதே!

மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே!

இளங்காத்து..

பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னுதான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னை மடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு
யாரும் துணை இல்ல

யாரோ வழித்துணைக்கு வந்தா
ஏதும் இணை இல்ல

உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

இளங்காத்து..

ஓ! மனசுல என்ன ஆகாயம்
தினம்தினம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல

இளங்காத்து..
இப்பாடலின் வீடியோ இங்கே..

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது

படம்: உயிரோடு உயிராக
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி
வரிகள்: வைரமுத்து
விரும்பி கேட்டவர்: சௌமியா
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்

இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம் ... (2)

பூவுக்கெல்லாம்..

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது
காற்றை குழல் கைது செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலந்ர்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

பூவுக்கெல்லாம்..
இப்பாடலின் வீடியோ இங்கே..