RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Monday, August 17, 2009

மடை திறந்து தாவும் நதியலை நான்

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
விரும்பி கேட்டவர் : ஜெய் கணேஷ்


மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்..

மடை திறந்து..


நேற்றென் அரங்கிலே நிழல்களில் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்..

மடை திறந்து..

இப்பாடலின் வீடியோ இங்கே..

No comments:

Post a Comment