படம்: கடல் மீன்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
விரும்பி கேட்டவர்: சௌமியா
தாலாட்டுதே வானம்தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
தாலாட்டுதே..
அலை மீது ஆடும்
உள்ளம் எங்கும்
ஒரே ராகம்
நிலை நீரில் ஆடும்
மீன்கள் ரெண்டும்
ஒரே கோலம்
மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்
தாலாட்டுதே வானம்..
இரு கண்கள் மோதி
செல்லும் போதும்
ஒரே எண்ணம்
ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும்
ஒரே ஜீவன்
சொர்க்கத்திலே இது முடிவானது!
சொர்க்கம் என்றே இது முடிவானது!
காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்
தாலாட்டுதே வானம்..
இப்பாடலின் வீடியோ இங்கே..
No comments:
Post a Comment