RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Thursday, August 20, 2009

இளமையெனும் பூங்காற்று

படம்: பகலில் ஒரு இரவு
இசை: இளையராஜா
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: சௌமியா

இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் .. (2)

இளமையெனும்..

தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா

இளமையெனும்..

அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

இளமையெனும்..

மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

இளமையெனும்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

No comments:

Post a Comment