RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Monday, August 17, 2009

பழமுதிர்சோலை எனக்காகத்தான்

படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே. ஜே.ஜேசுதாஸ், S.ஜானகி
வரிகள்: வாலி
விரும்பி கேட்டவர்: அனிதா
பழமுதிர்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைதான் அதற்காகத்தான்
நான்தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர்சோலை எனக்காகத்தான்..

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட

ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட

பறவைகள் போல் நாம்
பறந்திட வேண்டும்
பனி மலை மேல் நாம்
மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே

பழமுதிர்சோலை எனக்காகத்தான்..

பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்

நூலிழை போல் இங்கு நீங்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய் என கலந்திடும் நாள்

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்த்து இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட

பழமுதிர்சோலை எனக்காகத்தான்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

No comments:

Post a Comment