RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Wednesday, August 19, 2009

அன்பென்ற மழையிலே

படம்: மின்சாரக் கனவு
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: சௌமியா

அன்பென்ற
மழையிலே அகிலங்கள் நனையவே

அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே

விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே

கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே... அதிரூபன் தோன்றினானே..

போர்க்கொண்ட பூமியில் தூக்காடு காணவே
புகழ் மைந்தன் தோன்றினானே.....

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே

நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாக தோன்றினானே

இரும்பான நெஞ்சிலே ஈரங்கள் கசியவே
நிறைபாலன் தோன்றினானே

முட்க்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவி ராஜன் தோன்றினானே.....

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே..

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே...
இப்பாடலின் வீடியோ இங்கே..

No comments:

Post a Comment