தீராத விளையாட்டுப்பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களோடோயாத தொல்லை..
தீராத விளையாட்டுப்பிள்ளை!
திண்ணப்பழம் கொண்டு தருவான் - பாதி
திண்கின்றபோதிலே தட்டிப்பறிப்பான்..
என்னப்பன் என்னய்யன் என்றால் - அதனை
எச்சிற்படுத்தி கடித்தே கொடுப்பான்...
தீராத விளையாட்டுப்பிள்ளை!
பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்..
வண்ணப்புதுச்சேலைதணிலே புழுதி
வாரிக்குழைத்ததே வருத்தித் தொலைப்பான்...
தீராத விளையாட்டுப்பிள்ளை!
அழகுள்ள மலர் கொண்டுவந்தே - என்னை
அழஅழச் செய்துபின் கண்ணைமூடிக்கொள்
குழலிலே சூடுவேன் என்பான் - என்னை
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்..
தீராத விளையாட்டுப்பிள்ளை!
புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித்ததும்பும் நற்கீதம் படிப்பான் -
கல்லாய் மயங்குவதுபோலே அதை
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்-
அங்கென திறந்திருக்கும் வாய்தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும்பை போட்டுவிடுவான்..
தீராத விளையாட்டுப்பிள்ளை!
தெருவிலே பெண்களோடோயாத தொல்லை..
தீராத விளையாட்டுப்பிள்ளை!
திண்ணப்பழம் கொண்டு தருவான் - பாதி
திண்கின்றபோதிலே தட்டிப்பறிப்பான்..
என்னப்பன் என்னய்யன் என்றால் - அதனை
எச்சிற்படுத்தி கடித்தே கொடுப்பான்...
தீராத விளையாட்டுப்பிள்ளை!
பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்..
வண்ணப்புதுச்சேலைதணிலே புழுதி
வாரிக்குழைத்ததே வருத்தித் தொலைப்பான்...
தீராத விளையாட்டுப்பிள்ளை!
அழகுள்ள மலர் கொண்டுவந்தே - என்னை
அழஅழச் செய்துபின் கண்ணைமூடிக்கொள்
குழலிலே சூடுவேன் என்பான் - என்னை
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்..
தீராத விளையாட்டுப்பிள்ளை!
புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித்ததும்பும் நற்கீதம் படிப்பான் -
கல்லாய் மயங்குவதுபோலே அதை
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்-
அங்கென திறந்திருக்கும் வாய்தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும்பை போட்டுவிடுவான்..
தீராத விளையாட்டுப்பிள்ளை!
No comments:
Post a Comment