RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Tuesday, August 18, 2009

முழுமதி அவளது முகமாகும்

படம் : ஜோதா அக்பர்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்
விரும்பி கேட்டவர்: சௌமியா
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
இப்பாடலின் வீடியோ இங்கே..

16 comments:

  1. பாட்டை எழுதினவன் பேரை இருட்டடிப்பு செய்வது பச்சை துரோகம் தயவுசெய்து இது போல செய்யாதீர்கள்

    ReplyDelete
  2. நா.முத்துக்குமார் மட்டுமே வரிகளுக்கு சொந்தகார்

    ReplyDelete
    Replies
    1. வைரமுத்து பாடல்

      Delete
  3. அருமையா பாடலின் வரிகள் தந்த உங்களுக்கு நன்றி👍

    ReplyDelete
  4. பாடலை எழுதியவர் பெயர் எங்கப்பா.....

    ReplyDelete
  5. எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    ReplyDelete
  6. அருமையான பாடல் வரிகளை தந்த நா.முத்துக்குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் பாடல் ஆசிரியர் யார் என்று தெரியாமல் குறிப்பிட்டதற்கு

      Delete
    2. வைரமுத்து

      Delete
  7. பாடல் வரிகள் யார் எழுதினானு போட்றதுல என்ன பிரச்சனை உங்களுக்கு.. யாரு எழுதினானு தெரிஞ்சிட்டு அப்றம் கொண்டாடுங்க .. இங்க மட்டும் இல்ல நிறைய இடத்துல இப்டிதா நடக்குது. எழுதினவன கொஞ்சம் கூட நியாபகம் வச்சிக்குறதுஇல்ல இசை, பாடியவர் அவ்ளோதான் ..கொஞ்சமாவது யோசிங்கயா

    ReplyDelete
  8. நா.முத்துகுமார்.. பாடல் வரிகள்

    ReplyDelete