RSS

Search Songs (Type here Copy and paste in search Box)

புதுசு

Loading...

Thursday, August 20, 2009

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா

படம்: செந்தூர பூவே
இசை: மனோஜ் ஜியன்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
விரும்பி கேட்டவர்: ஜெய் கணேஷ்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை நீரிலே தன் நிலை மீறியே
ஒரு கதி போல என் நெஞ்சம் அலை மோதுதே ...

ஓஓஓஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெல்லைக்கிங்கே களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெல்லைக்கிங்கே களங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டே ன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இப்பாடலின் வீடியோ இங்கே..

4 comments:

  1. சூப்பரான பாடல் சகோ நன்றிகள் கோடி

    ReplyDelete
  2. இனிமை இனிமை

    ReplyDelete
  3. நிறைய எழுத்து பிழைகள் உள்ளது.

    ReplyDelete